உடன் அமுலுக்கு வரும்வகையில் வியட்நாமில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை

31.05.2021 12:25:33

உடன் அமுலுக்கு வரும்வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் இந்திய மற்றும் பிரித்தானிய கலவையுடன் கூடிய மாறுபாட்டை அண்மையில் கண்டறிந்ததாக வியட்நாம் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாமிற்கு சென்ற விமான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அடுத்த அறிவிப்பு வரும்வரை நாட்டுக்குள்வர தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது