இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி !

13.04.2021 11:29:02

 

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா சமநிலை செய்துள்ளது.

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 50 ஓட்டங்களையும் ஹபீஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ஜோர்ஜ் லிண்டே மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சம்ஸி மற்றும் மகலா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 141 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 14 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, எய்டன் மார்கிரம் 54 ஓட்டங்களையும் ஹெய்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், உஸ்மான் காதீர் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஹஸ்னெய்ன் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாபிரிக்கா அணியின் ஜோர்ஜ் லிண்டே தெரிவுசெய்யப்பட்டார்.