போலந்து மற்றும் லிதுவேனியாவில் போராட்டம் - பெலரஸ் கைது விவகாரம்

30.05.2021 12:00:18

அண்டை நாடான பெலரஸில் எதிர்க்கட்சிக்கு ஆதரவைக் காண்பிப்பதற்காக போலந்து மற்றும் லிதுவேனியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்ஸ்க்கு திருப்பி விமானத்தில் கைது செய்யப்பட்ட ஒரு பெலரஸிய எதிர்ப்பாளரை விடுவிக்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

காதலியுடன் குறித்த எதிர்ப்பாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போது உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது./

இந்நிலையில் பெலாரஷ்ய வான்வெளியைத் தவிர்க்க விமான நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிணையம வலியுறுத்தியுள்ளது.

கிரேக்கத்தில் இருந்து லிதுவேனியாவுக்கு சென்றுகொண்டிருந்த 26 வயதுடைய ரோமன் புரோட்டசெவிச் மற்றும் 23 வயதுடைய சோபியா சபேகா ஆகியோர் விமானத்தை இடைமறித்து கருத்து செய்யப்பட்டனர்.