இலங்கையில் மற்றுமொரு பகுதியை கையேற்ற சீனா நிறுவனம் !

25.05.2021 10:38:35

 

நெடுஞ்சாலை ஒன்றினை அமைப்பதற்கு சீனா நிறுவனம் ஒன்றுடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி அத்துருகிரிய முதல் களனிய வரையிலான நெடுஞ்சாலையே இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சீன துறைமுக கட்டுமான நிறுவனத்துடன் (China Harbour Construction Company) குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.