25 வருட கால ஆட்சி மாறியது- இன்று பதவியேற்கும் புதியவர்!
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமானது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சந்துன் ரத்நாயக்க இன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை சுப வேளையில் ஒப்பமிட்டு தனது கடமைகளை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் சமயத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தவிசாளருக்கான தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட திறந்த வாக்கெடுப்பின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சந்துன் ரத்னாயக்க புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.