இந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது – பிரகாஷ் ஜவடேகர்

15.04.2021 09:18:50

பருவநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் இந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரான்ஸ் தூதுவரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக செயற்படுத்தி வரும் ஒரே நாடு இந்தியா தான்.

பருவ நிலை மாற்ற இலக்கை எட்டுவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா எந்தவித நெருக்கடிக்கும் அடிப்பணியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட மாசுபாடு காரணமாக உலகமே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த அவர், பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க பணக்கார நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.