மஹிந்தானந்த அளுத்கமகே நிதி மோசடி வழக்கிலிருந்து விடுதலை

25.02.2021 09:09:52

தொழிற்சங்கத்துக்கு சொந்தமான நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்தபோது, அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபாய் நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.