எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம் !

17.01.2021 11:07:06

 பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும், அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டவர்.

அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளை தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்.ஜி.ஆருக்கு எனது புகழ் வணக்கம்.