வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை வட அயர்லாந்தில் மீண்டும்திறக்க அனுமதி !

16.04.2021 10:38:40

வடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை திறக்க நேற்று (வியாழக்கிழமை) அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

உரிமம் பெறாத மற்றும் உரிமம் பெற்ற விருந்தோம்பல் வணிகங்களான உணவகங்கள், பீர் தோட்டங்கள் மற்றும் அருந்தகங்களை வெளியில் திறக்க முடியும்.

விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட உட்புற விருந்தோம்பல் இடங்கள் மே 24ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இதேபோல, அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை ஏப்ரல் 30ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும்.

பல துறைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான திகதிகளை வடக்கு அயர்லாந்து அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர்.