"பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் நாடு தோற்று விட்டது”

11.03.2021 09:03:48

 

“இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியா யத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என 11 ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக் கொண்டுள்ளோம். அதனையே
2 ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது.

எனவே உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பது இன்று நிரூபணமாகிவிட்டது. பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் நாடு தோற்று விட்டது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் நேற்று தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி
கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய
போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிக மோசமான தற்கொலைத் தாக்குதல் இடம்
பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும்,
குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு அரசாங்கத்
துக்கு உள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை வழங்குவதில்
தோல்வியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்தத் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரி யார் என பேராயர் மல்கம் ரஞ்சித்
ஆண்டகை கேள்வி எழுப்புகின்றார். ஆனால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே சஹ்ரானே பிரதான சூத்திரதாரி என சபையில் கூறுகின்றார்.

அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவின்
அறிக்கையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. முத
லில் பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை வாசிக்க வேண்டும். குற்றவாளி
களைக் கண்டறியும் வழிமுறையை பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்
குழு அறிக்கையின் பல விடயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி
ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலை யார் திட்டமிட்டது, யார் பின்னால் இருந்து இயங்கி
யது, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இந்தத் தாக்குதல் இடம்பெற்
றது என்பதே கண்டறியப்படவேண்டும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்
விசாரிக்கப்பட்டும் இப்போது வரையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரி
யாது என அரசாங்கம் கூறுகின்றது என்றால், இதன் பின்னணியில் எதோ தவறு
இடம்பெறுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதுவே பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும். எந்த அரசாங்கம் ஆட்சி
யில் இருந்தாலும் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு
உள்ளது.

இந்த நாட்டில் எமக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பில் நியாயத்தைக் கேட்டு
நிற்கின்ற வேளையில், சர்வதேச விசாரணையை நடத்தக்கோரி நிற்கின்ற நிலை
யில், சர்வதேச விசாரணை அவசியமில்லை, உள்ளக விசாரணைகளில் தீர்வு காண்
போம் எனக் கூறியவர்கள் இப்போது இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை
வேண்டும் எனக் கேட்கின்றனர்.

ஏன் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது? ஏனென்
றால் பொறுப்புக்கூறலை நிறைவேற்றவும், தமது மக்களுக்கான நியாயத்தை, நீதியை நிலைநாட்டவும் இலங்கை அரசு தோற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இப்போது
இடம்பெறுகிறது. எமது மக்களுக்கு பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட
வேண்டும் என நாம் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் கேட்டுக்கொண்டுள்ளோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பித்த எமது கோரிக்கை இன்று
வரை தொடர்கின்றது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராய
வும் பொறுப்புக் கூறவும் வலியுறுத்துகின்றோம்” என்றார்.