ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

03.06.2021 10:00:00

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 80ஆயிரத்து 49பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் இதுவரை 36இலட்சத்து 87ஆயிரத்து 762பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 984பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 66பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 47ஆயிரத்து 266பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 236பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 34இலட்சத்து 60ஆயிரத்து 447பேர் பூரண குணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.