தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் – சஜித்

26.04.2021 11:20:28

தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களைப் போல எவரும் தங்கள் வேலையில் தலையிட அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தன்னை நோக்கிவந்த அனைத்து பிரச்சினைகளின் போதும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு உதவியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் எவ்விதமான பிரச்சினைகள் காணப்பட்டாலும் மக்களுக்காக சேவை செய்ய உதவிய மனிதர்களில் அவரும் ஒருவர் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.