எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: இந்தியா தக்க பதிலடி

20.01.2021 10:26:16

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில் அக்னூர் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தகவலை ராணுவ வட்டாரங்கள் கூறின.