இந்தியாவில் கொரோனாவால் மேலும் 3 இலட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

16.05.2021 10:38:54

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 இலட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 36 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் 4 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இந்தியாவில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 2 இலட்சத்து 70 ஆயிரத்து 319  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.