கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அளுநர்களுடன் மோடி ஆலோசனை !

13.04.2021 10:58:42

 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் பெற்று வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில ஆளுநர்களுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெய்நிகர் முறையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் நாடு, முழுவதும், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.