இலங்கை உண்மைகளை பொய்யாக்க முயல்கின்றது- கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை

22.01.2021 10:28:34

இலங்கை உண்மைகளை பொய்யாக்க முயல்வதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார்.
கட்டுவாப்பிட்டிய சென்செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்க செய்ய முடியாது என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தவறான விடயங்கள் குறித்து தவறு எனவும் சரியான விடயங்கள் குறித்து சரியானது எனவும் தெரிவிப்பதற்கான துணிச்சல் மக்களுக்கு அவசியம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சரியான விடயமொன்றை அல்லது தவறான விடயமொன்றை செய்தவர் எந்த கட்சியை மதத்தை இனத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை சரியான செயலை செய்வதே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருதேசமாக நாடாக எங்கள் மனசசாட்சிகள் இறந்துகொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் மக்களும் தேசமும் ஒரு சில அடையாளங்களுக்குள் சிக்குப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மைகளை பொய்யாக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு;ள்ளோம் என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் உரக்க கூச்சலிடுவதால் உண்மைகளை பொய்களாக மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்பது உண்மை பொய் என்பது பொய் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ தலைமை துணிச்சலுடன் பேசவேண்டும் ஒரு பேராயராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நான் அதனையே செய்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது எனது உரிமை நான் இதிலிருந்து தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் தீடீர் மாற்றங்கள் ஏற்படும்போது பலர் முகநூல் ஊடாக என்னை நிந்திக்கின்றனர் அது பரவாயில்லை சென் செபஸ்டியன்கள் மரணத்தினை பார்த்து அச்சப்படுவதில்லை,உங்கள் பேராயரும் அச்சப்படுவதில்லை,நான் உங்களிற்காக குரல்கொடுப்பேன் நீங்கள் உங்கள் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டும் எந்த சக்தியாலும் என்னை மௌனமாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.