ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

19.04.2021 10:36:57

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் மொத்தமாக ஏழு இலட்சத்து 50ஆயிரத்து 508பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை 25ஆயிரத்து 184பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 706பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 205பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 70ஆயிரத்து 295பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 51பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து 55ஆயிரத்து 29பேர் பூரண குணமடைந்துள்ளனர்.