நாளை 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட்

27.02.2021 09:56:45

பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த ரொக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியுள்ளது.

மேலும்  முதலாவது ரொக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைகோள்களின் செயல்பாடுகளையும் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கவுண்ட்டவுனை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ரொக்கெட் விண்ணில் தீப்பிழம்பை கக்கியப்படி செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.