தமிழகத்தின் கொரோனா நிலைவரம் !

14.05.2021 10:22:29

 

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 129 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் 30 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் 13 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாவர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 இலட்சத்து 99 ஆயிரத்து 485 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போதுவரை 2 கோடியே 46 இலட்சத்து 25 ஆயிரத்து 416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் 297 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.