திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பமனு
மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிகழ்வில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டார்.
வழக்கமாக திமுக தலைவர் பெயரில் பலர் விருப்பமனு தாக்கல் செய்யும் நிலையில், இந்த முறை ஸ்டாலினே நேரடியாக விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த இரண்டு முறையும், கொளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஸ்டாலின் மூன்றாவது முறையாக கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்