கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது – நிர்மலா சீதாராமன்

14.04.2021 09:19:56

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ள போதிலும், பெரிய அளவில் பொது முடக்கங்களை அமுல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு தெளிவாகவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2 ஆவது அலையை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.