ஐ.தே.கவின் பிரதான அமைப்பாளர் சஜித்துடன் இணைவு!

22.01.2021 09:54:48

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் களுத்துறை மாவாட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அருண தீபால் நேற்றைய ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார் என ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்துகட்சியில் இணைந்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான அருண தீபால் ஹொரான தொகுதி ஐக்கிய தேசிய கட்சி பிரதான அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.