இலங்கை சொந்த மண்ணில் மே.தீவுகளை வீழ்த்துமா !

02.03.2021 09:35:33

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், இலங்கை அணிக்கு அஞ்சலோ மத்தியூசும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிய்ரன் பொலார்ட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 11 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் ஆறு முறை இலங்கை அணியும் ஐந்து முறை மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இந்தப் போட்டியின் முடிவு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.