நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை - மியன்மார் அரசியல் சர்ச்சை

30.05.2021 12:16:30

 

மியன்மார் அரசியல் சர்ச்சையின் தொடர்பாக வரையப்பட்ட நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட 9 நாடுகள் மாற்றங்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மியன்மார் ஆயுதங்களின் தொடர்பாக விற்பனை, பரிமாற்றம், விநியோகம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அதனை அகற்ற வேண்டும் என்று ஆசியான் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆங்சான் சூசியையும் ஆட்சிக் கவிழ்ப்பில் தடுத்துவைக்கப்பட்ட இதர முன்னாள் தலைவர்களையும் நிபந்தனையில்லாமல் உடனடியாக விடுவிக்கும்படியும் தீர்மானத்தில் மாற்றி எழுதும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.