எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு இலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்....

27.02.2021 10:15:04

 

இலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

14பேர் கொண்ட இந்த அணியில், கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு வலக் கை வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் எட்வட்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்லும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுதவிர அகீல் ஹொசைன் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோர் இத்தொடரின் ஊடாக சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெறுகின்றனர்.

கிய்ரன் பொலார்ட் தலைமையிலான அணியில், நிக்கோலஸ் பூரான், பெபியன் அலென், டுவைன் பிராவோ, பிடெல் எட்வட்ஸ், ஆந்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஜேஸன் ஹோல்டர், அகீல் ஹொசைன், எவீன் லீவிஸ், ஒபேட் மெக்கோய், ரொவ்மன் பவல், லெண்ட்ல் சிமென்ஸ், கெவீன் சின்கியார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் ரி-20 மற்றும் ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெறவுள்ளது.