பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்றது பெருமை... விஜய் வசந்த் எம்.பி.

30.01.2023 22:45:36

கன்னியாகுமரியில் ஆரம்பித்த யாத்திரை காஷ்மீரில் நிறைவடைந்தது. ஸ்ரீநகர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், ராகுல் காந்தி உரையாற்றினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத ஒற்றுமை பாத யாத்திரையை ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்தார். இன்று ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், ராகுல் காந்தி உரையாற்றினார்.

நிறைவு விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார். அங்கிருந்தபடி பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். '

தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற #இந்தியஒற்றுமைபயணம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து இன்று காஷ்மீரில் இனிதே நிறைவடைந்தது. இந்த யாத்திரை தொடங்கிய போது கன்னியாகுமரியிலும், நிறைவடைந்த போது காஷ்மீரிலும் பங்கு பெற முடிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். மிக பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. தலைவரின் இந்த யாத்திரையின் குறிக்கோள் நிறைவேற நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி' என விஜய் வசந்த் கூறியுள்ளார்.