அமெரிக்க படைகளை குறிவைத்து ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல் !

15.04.2021 10:20:04

 

வடக்கு ஈராக்கின் எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியிலுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமான குர்திஷ்தானில் உள்ள எர்பில் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஒரு துருக்கிய சிப்பாய் உயிரிழந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈர்பிலில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆளில்லா வான்வழி விமானம் நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குதல் இதுவாகும்.

அமெரிக்க படைகள் மற்றும் பாக்தாத்தில் உள்ள தூதரகம் ஆகியவற்றின் மீது தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த தாக்குதலை ஈரான் ஆதரவுடைய போராளிகள் நடத்தியதாக வொஷிங்டன் குற்றம் சாட்டுகிறது.