சிட்னி மைதானத்தில் இருந்து 6 ரசிகர்கள் வெளியேற்றம்..

10.01.2021 10:51:19

சிட்னி மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால் 6 பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோரைப் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். இனவெறியை தூண்டும் வகையில் அவர்கள் பேசியதால் இந்த விவகாரம் குறித்து நடுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டத்தின்போதும் இந்திய வீரர்களை குறிவைத்து பார்வையாளர்கள் சிலர் பேசியதை சிராஜ் கவனித்துள்ளார். இதனால் அவர் பந்துவீச்சை நிறுத்தினார். பின்னர் நடுவர் மற்றும் சக வீரர்களிடம் இந்த தகவலை கூறினார். இந்திய வீரர்களை கிண்டல் செய்த 6 ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 10 நிமிடத்திற்கு பிறகு போட்டி தொடங்கியது.