கப்பல் எண்ணெய் கசிவைத் தடுக்க தயாராகவுள்ளதாக அறிவிப்பு

03.06.2021 09:49:00

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலில் 322 தொன் எண்ணெய் காணப்பட்ட போதிலும் தற்போது எண்ணெய் காணப்படுகின்றதா என்பது தொடர்பாக தகவல்கள் கிடைக்கவில்லை என அந்தச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படுமாயின், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுழியோடிகளையும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.