அரசியல்வாதிகளுக்கும் எங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற வேறுபாடாகும்

05.06.2021 10:13:15

 

போலித் தமிழ் தேசியவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகவே இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை), கற்கோவளம் பகுதியில் இடிந்த நிலையில் காணப்பட்ட பாலத்தினை நேரில் சென்று  பார்வையிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது,  “யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் வந்தால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தடுப்போம் என கூறியவர்கள். தற்போது அந்த புகையிரத்தில் ஏறி பயணம் மேற்கொள்வதற்கு முண்டியடிக்கின்றனர்.

இதுதான் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் எங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற வேறுபாடாகும். ஆகவே இதனை  மக்கள் புரிந்து கொண்டிருந்தால் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்காது.

மேலும் சிறந்த வேலைத்திட்டங்களை உருவாக்கி, நீண்ட காலத்திற்கு பலன் அடைந்திருக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.