தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு - இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

02.06.2021 09:15:02

இலங்கையில் கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நொடியிலிருந்து தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் நிறைவேற்றப்பட்டு தற்போது ஆரம்பமாகவுள்ள போர்ட் சிட்டி முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலனாய்வுத்துறை வழங்கிய தகவலைத் தொடர்ந்தே மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.