தைவானில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 36 பயணிகள் உயிரிழப்பு- 72க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

02.04.2021 10:51:07

கிழக்கு தைவானில் ஒரு சுரங்கப்பாதையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 36 பயணிகள் உயிரிழந்ததோடு 72க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 350 பேரை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கிழக்கு தைவானில் ஹூலியனுக்கு வடக்கே விபத்துக்குள்ளானதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய மீட்பு நடவடிக்கையின் போது 61 பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 72 பேர் இன்னும் ரயில் வண்டிகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கை தெரிவிக்கின்றது.

தற்போது விபத்து நடந்த விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடருகின்றன.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தீவின் மிக மோசமான ரயில் பேரழிவில், 2018ஆம் ஆண்டில், வடகிழக்கு தைவானில் ஒரு ரயில் தடம் புரண்டதில் 18பேர் இறந்தனர் மற்றும் 175பேர் காயமடைந்தனர்.