வெடிப்பு சம்பவம் ; பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி - முல்லைத்தீவு

02.06.2021 10:36:05

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர் குண்டுவெடிப்புச் ஒன்று சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு வைத்த போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறிய காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாகவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.