19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது - பிரித்தானியா

19.01.2021 08:37:18

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 89ஆயிரத்து 860பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 34இலட்சத்து 33ஆயிரத்து 494பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 37ஆயிரத்து 535பேர் பாதிக்கப்பட்டதோடு, 599பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 17இலட்சத்து 97ஆயிரத்து 59பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 789பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 46ஆயிரத்து 575பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.