உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா !

12.04.2021 09:50:46

உச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) காணொலி வாயிலாக நடைபெற்றுகிறது.

உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாக மட்டுமே நடைபெறும்  என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றினால் 1.68 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.