புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச் செய்தி !

14.04.2021 09:17:41

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்  செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும், மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.

இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.