அசாம் மற்றும் புதுச்சேரி பா.ஜ.க. வசமானது !

03.05.2021 15:46:41

இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

இதன்படி, அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளின்படி பா.ஜ.க. கூட்டணி 75 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களையும் ஏனைய கட்சிகள் இரு இடங்களையும் கைப்பற்றுகின்றன.

அத்துடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கான முடிவுகள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், பா.ஜ.க. இணைந்த என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி ஆறு தொகுதிகளையும் ஏனைய கட்சிகள் ஐந்து தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன.

புதுச்சேரியில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது பா.ஜ.க. புதுச்சேரியின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.