சொந்த மண்ணிலேயே இந்தியாவை பந்தாடியது இங்கிலாந்து !

27.03.2021 09:09:58

இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்யதுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

புனே மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல்.ராகுல் 108 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் 77 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், அறிமுக வீரர் டொப்லே மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 337 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 43.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 124 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 99 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்ணா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 112 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோனி பேயர்ஸ்டொவ் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி, நாளை புனே மைதானத்தில் நடைபெறவுள்ளது.