மும்பையை எளிதாக வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி !

24.04.2021 11:24:54

 

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 17ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 63 ஓட்டங்களையும் சூர்ய குமார் யாதவ் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தீபக் ஹூடா மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ராகுல் சஹார் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 52 பந்துகளில் தலா 3 சிக்ஸர்கள், பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.