இன்று முதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் ?

16.04.2021 10:39:59

ஐ.பி.எல். ரி-20 தொடரின் எட்டாவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு டோனியும் பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும் தலைமை தாங்கவுள்ளனர்.

சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் டெல்லி அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியுடனான தனது முதலாவது போட்டியில் வெற்றிபெற்றது.

ஆகவே இப்போட்டியில் சென்னை அணி முதல் வெற்றிக்காகவும், பஞ்சாப் அணி தனது வெற்றி பாதையை தொடரவும் போராடும்.

இரு அணிகளும் இதற்கு முன்னதாக 23 முறை மோதியுள்ளன. இதில் 14 முறை சென்னை அணியும் 9 முறை பஞ்சாப் அணியும் வெற்றிபெற்றுள்ளன.