அமெரிக்க தூதுவர் கவலை.. முன்னாள் நிதி அமைச்சர் கருத்து : மணிவண்ணன் கைது

10.04.2021 09:41:10

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நீண்டநேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை சட்டத்தின் வலுவான ஆட்சி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியாகும் என குறிப்பிட்டுள்ளார்.