ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – இன்று வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்!

31.01.2023 22:33:39

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

 

திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 27ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்புத்மனு தாக்கல் இன்று தொடங்கி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

5-ம் திகதி விடுமுறை தினத்தை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.