நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை

05.06.2021 10:11:11

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சீரற்ற வானிலை காரணமாக 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 07 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 579 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.