சமூகத்தில் கண்டறியப்படாத புதிய கொரோனா வகைகள் இருக்கக்கூடும் என எச்சரிக்கை !

12.05.2021 09:49:10

கண்டறியப்படாத புதிய கொரோனா வகைகள் சமூகத்தில் இருக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) எச்சரித்தனர்.

சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர கூறுகையில், புதிய மாறுபாடுகளைக் கொண்ட நபர்கள் சமூகத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

இலங்கைக்கு வருபவர்கள் அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலதிக ஆய்வுகளுக்கு மாதிரிகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த ஒரு நபரில் கொரோனா வைரஸின் இந்திய மாறுபாட்டைக் கண்டறிய சோதனைகள் வழிவகுத்தன என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், ஆரம்ப கட்டங்களில் புதிய மாறுபாட்டைக் கண்டறியாதவர்கள் இப்போது சமூகத்துடன் சுற்றி வருவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.